தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

0
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 5ம் தேதி திறப்பு – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளுக்கான பள்ளிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி திறந்து வைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதங்களுக்கு முன்னதாக அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களை வாக்குச் சாவடிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, “06.04.2021 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 05.04.2021 திங்கள்கிழமை தேர்தல் முன்னேற்பாடுகள் செய்ய எதுவாகவும் மற்றும் கொரோனா நோய் தொற்று தவிர்க்கும்பொருட்டு நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காகவும் திறந்து வைக்க வேண்டும் மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!

தேர்தல் ஆணை வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் எவ்வித விடுப்புமின்றி முழு அளவில் தேர்தல் பணிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பணியில் பங்கேற்காதவர்கள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என அனைவருக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களாக செயல்படும் அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் நல மற்றும் இதர வகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் வெப் கேமரா பொருத்துதல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாடுகள் வருவாய் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று முதல் வாக்குப்பதிவு நாள் வரை வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளை திறந்து வைத்து தேர்தல் பணியினை மேற்கொள்ள வருகை தர உள்ள வருவாய் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு பேராசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர் கல்வித்துறை உத்தரவு!!

மேலும் மதிப்புமிகு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 02.04.2021 அன்று வழங்கப்பட்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை,

  1. வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.
  2. பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளை எக்காரணம் கொண்டும் பூட்டி வைத்திருக்க கூடாது.
  3. பள்ளியின் நீர்தேக்க தொட்டிகளில் முழுவதும் நீரேற்றி நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
  4. வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் மேஜை நாற்காலிகள் மற்றும் பெஞ்சு உள்ளிட்ட தளவாட சாமான்களை வாக்குப்பதிவு நடைபெறும் அறைகளில் வைத்திருக்க வேண்டும்.

6 வங்கிகளின் IFSC கோர்டுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

வாக்குப்பதிவு நடைபெறும் அறைகளை தவிர்த்து வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிய வருகை தரும் அலுவலர்கள் தங்கி பணிபுரிய எதுவாக மின்வசதிகளுடன் கூடிய போதுமான அறைகளை சுத்தம் செய்து அவ்வறைகளின் சாவியினை உரிய உள்ளூர் அலுவரிடம் ஒப்படைத்திட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!