தமிழக அரசு பேராசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர் கல்வித்துறை உத்தரவு!!
ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதான சஸ்பெண்ட் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சில பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் வெளியிட்ட அறிவிப்பின் படி, “2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது அல்லது சஸ்பெண்ட் கூட செய்யப்பட்டனர். பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
தற்போது அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மீது தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேராசிரியர்கள் தற்காலிக பணி நீக்க காலங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
இது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டோரின் பணி பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.