தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டது. இருந்த போதிலும் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

03.04.2021: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட “4 முதல் 6” டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!

04.04.2021: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட “4 முதல் 6” டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் – ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!

05.04.2021 முதல் 07.04.2021:

கரூர், தர்மபுரி, சேலம், நமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட “4 முதல் 5” டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். இதனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் வேட்பாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வெளியில் வேலை செய்வது, மற்றும் ஊர்வலம் செய்வது தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 03.04.2021 முதல் 07.04.2021 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் – கல்வித்துறை ஆலோசனை!!

சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நேற்று அந்தமான் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்திற்கு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும். இதன் காரணமாக,
03.04.2021: வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்!

03.04.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இரு பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!