ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஏப்ரல் 6 முதல் முழு ஊரடங்கு உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால், துர்க் மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது முடக்கம்:

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிது சிறிதாக உயர ஆரம்பித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது ஒரு நாளைக்கு 89 ஆயிரம் வரை உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளின் தினசரி புதிய பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் புதிய பாதிப்புகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள மாநிலம் சத்தீஸ்கர். அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதித்து உத்தரவிட்டுள்ளார் துர்க் மாவட்ட கலெக்டர் சர்வேஸ்வர் நரேந்திர பூரி.

வட்டி இல்லாமல் EPFO வீட்டுக்கடன் பெறுதல் – எளிய வழிமுறை!!

பொது முடக்கம் குறித்து அவர் தெரிவிக்கும் போது, ‘ஊரடங்கு தான் கொரோனா பரவுவதை தடுக்கும். மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 40 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 754 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!