தமிழக மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு பிரிவுகளை அமைக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு பிரிவு
தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. அதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு கொசு பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெங்குவால் தினமும் பல மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளையும், படுக்கை வசதிகளையும் அமைக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், மாநிலம் முழுவதும் மழை பெய்வதால் ஏடிஸ் வகைக்கு கொசுக்களின் உற்பத்தியும், அதனால் பரவும் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. எல்-நினோ எனப்படும் கடல் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் காரணமாக டெங்கு தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதனால் தமிழகத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கொசுக்களால் தீவிரமாக நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இந்த நோய்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிஇருக்கிறது. மாநிலம் முழுவதும் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக வீடுகளில் மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் எந்த சூழ்நிலையிலும் சிகிச்சை அளிக்க வார்டுகளையும், படுக்கைகளையும் அமைக்க வேண்டும். மேலும் ரத்த வங்கிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இது குறித்த அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.