தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இனி வரும் நாட்களில் வெயில் இன்னும் மோசமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற போட்டி தேர்வுக்கு இதை மட்டும் படித்தால் போதும் – உடனே பாருங்க மக்களே…!
அந்த வகையில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசக் கூடும். அதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும், அதிகமாக தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை குடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.