தமிழகத்தில் 4000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் புதிதாக 4000 பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
புதிய பேருந்துகள்
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் புதிய பேருந்துகள் சமீபத்தில் வாங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜன.20 ஆம் தேதி 100 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, 99 பேருந்துகள் என புதிதாக 199 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம் – ஷாக்கில் பணியாளர்கள்!
மேலும், புதிதாக 4000 பேருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டு நடைமுறை முடிந்து விரைவில் அந்த பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.