தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டில் 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் மூடப்பட்டன. பின்னர் தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு கருத்துகேட்பு கூட்டங்களுக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!

இந்நிலையில் பிப்ரவரி மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் முக்கிய தளர்வாக 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்ரவரி 7 கடைசி நாள்!!

11ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களும் வெளியிடப்பட்டு விட்டன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அவர்கள் அறிவிப்பார் எனவும் கூறி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!