மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021
சமூகப்பாதுகாப்பு துறை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் வசிக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்தி 19.02.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | நன்னடத்தை அலுவலர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 19.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
Legal cum Probation Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Probation Officer வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பாதுகாப்பு அலுவலக கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BL or LLB முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நன்னடத்தை அலுவலர் மாத சம்பளம்:
நன்னடத்தை அலுவலர் – ரூ.21,000/- தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://madurai.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 19.02.2021 மாலை 5:00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
பிளாட் எண்: 91 & 94,
அசோக் நகர் 3 வது தெரு,
மதுரை -625018.