‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்ரவரி 7 கடைசி நாள்!!
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படித்து முடித்தபின் மேற்படிப்பை தொடர ஒவ்வொரு ஆண்டும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்சி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாசாவின் புதிய செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா லால் நியமனம்!!
இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, “ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளன.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!
இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனை பூர்த்தி செய்து சாதிச்சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வருகிற 7 ஆம் தேதிக்குள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று இணையதளம் மூலமாக 13.02.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்