முடிந்தது கோடை விடுமுறை – தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி வெளியானது!

0
முடிந்தது கோடை விடுமுறை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி வெளியானது!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு , 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தது. ஏப்ரல் மற்றும் மே மாத முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது.

TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – Mains தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!

சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. 2024-25 ஆம் கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே பள்ளிகள் துவங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!