தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் புதிய ரேஷன் கார்டு – அரசு அறிவிப்பு!!

0
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் புதிய ரேஷன் கார்டு - அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டது. இதனால் அத்தியாவசிய அரசுப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 என்பதால் தமிழகத்தில் இன்றளவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட ரேஷன் கார்டு வழங்கும் பணியை வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தொடங்க இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படவுள்ளது.

TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

தமிழகத்தில் தற்போது உரிமைத் தொகை பெற ரேஷன் கார்டு மிகவும் அவசியம் என்பதால் இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!