தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து கோடை மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக குளுமையான சூழல் நிலவியுள்ளது. தற்போது மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – Mains தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!
இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி என மொத்தம் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.