தமிழக அரசு மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் கலந்தாய்வு – முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பாடத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அந்த தேதியில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு அறிவிப்பு
சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருப்பதாக சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளார். அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
பென்ஷன் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு – இனி ஈஸியா வாங்கலாம்!
முதல் நாளான ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினா், தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினருக்கான வாரிசுகள் பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற இருக்கிறது. இரண்டாம் நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியியல், பி.எஸ்சி. கணிதம் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி பி.ஏ. பொருளியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.சி.ஏ ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பி.எஸ்சி. தாவரவியல், பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல், பி.எஸ்சி. வேதியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. மாணவிகள் எந்தந்த தேதிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது என்பதை அறிந்து தவறாமல் கலந்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.