பென்ஷன் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு – இனி ஈஸியா வாங்கலாம்!
நாட்டில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு தற்போது புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக ஓய்வூதியம் சுலபமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பென்ஷன் பெறுவோர் கவனத்திற்கு
மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் பணி புரிந்து பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பிராவிடண்ட் ஃபண்ட் வாயிலாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு ஊழியர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த கணக்கில் இருந்து ஊழியர்கள் தேவைப்படும் போது பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால் ஊழியர் ஒருவர் பணி நிறைவடையும் போது PF கணக்கின் கீழ் சேமிக்கப்பட்ட தொகை முழுவதுமாக எடுக்கப்பட்டு EPS கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
அதன்பின் மாதந்தோறும் EPS கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் இதற்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக பென்ஷன் மற்றும் பென்ஷன் வாங்குபவர்கள் நல சங்கம், இந்த ஒருங்கிணைந்த பென்ஷன் வழங்கும் அமைப்பிற்கு SBI உடன் இணைந்து செயல்படும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே உள்ள பென்ஷன் போர்டல், வங்கி உருவாக்கும் மத்திய பென்ஷன் போர்ட்டலுடன் ஒருங்கிணைத்து, ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு பெரிய அளவில் உதவும்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்க வேண்டிய வாழ் நாள் சான்றிதழை டிஜிட்டல் மூலமாக பதிவேற்றவும் மற்றும் முகம் வழியே உறுதிப்படுத்தல் மேற்கொள்ளவும் உள்ளதாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. PF கணக்குகள் ஒருங்கிணைப்பதைப்போல ஒரு மத்திய பென்ஷன் விநியோகிக்கும் அமைப்பை உருவாக்குவதாக ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் 130 பிராந்திய PF அலுவலகங்கள் உள்ளது. இதனை ஒன்றினைத்து செயல்படுத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 73 லட்ச ஓய்வூதியக்காரர்களுக்கும் ஒரே நேரத்தில் தங்களின் வங்கி கணக்கில் சேர வேண்டிய ஓய்வூதியத்தொகை செலுத்தப்படும்.