10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கடந்த 2018 ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை போன்று பாதிப்பு மீண்டும் ஏற்படாதவாறு மாநில அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும், தேர்வை ஒத்திவைத்தும் உள்ளது. மேலும், இதுவரை கனமழையினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை:
தென்மேற்கு பருவமழை ஆனது நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமெடுத்து பொழிந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பொழிந்த வண்ணமாக உள்ளது. அதற்கு காரணமே பிற மாநிலங்களில் பெய்யும் மழையின் தாக்கம் தான் என்றே சொல்லலாம். குறிப்பாக கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வருகிற மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி நெய்யாறு உட்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா – கட்டுப்பாடுகள் விதிப்பு! ஆட்சியர் உத்தரவு!
இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். அதில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரும், திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் ஆவர். மேலும், கனமழையால் உண்டாகிய வெள்ளத்தில் இரண்டரை வயது சிறுமி உட்பட 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ராஜேஷ் (40) என்பவரின் உடல் மீட்கப்பட்டு மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கனமழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, இன்று கேரள மாநிலத்தில் சில பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்டும், ஆரஞ்சு அலெர்ட்டும் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நாளையும் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும், கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற உள்ள தேர்வை ஒத்திவைத்தும் உள்ளது.