பாண்டியன் ஸ்டோர்ஸ் vs பாக்கியலட்சுமி மெகா சங்கமம் பற்றிய சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு செலவு செய்ததை நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் மூர்த்தியும், தனமும் கோவிலுக்கு சென்று முல்லைக்கு நல்ல செய்தி வர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். அடுத்து வர போகும் எபிசோடில் பாக்கியலட்சுமி சீரியல் உடன் மெகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி:
விஜய் டிவி சீரியல்களில் தற்போது டாப் வரிசையில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கர்ப்பமாக வேண்டும் என டிரீட்மென்ட் போக அதற்கு நிறைய பணம் செலவானதை நினைத்து மீனா ஒரு பக்கம் வருத்தப்படுகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா புது வீட்டிற்கு போக முடியவில்லை என நினைத்து வருத்தப்படுகின்றனர். இந்த விஷயம் கதிருக்கு தெரியவர கதிர் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
நாளைய எபிசோடில் மூர்த்தியும் தனமும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது தனம் இன்று முல்லைக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். மூர்த்தியும் முல்லைக்கு நல்ல செய்தி வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். இந்த வாரம் முல்லைக்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வர போகும் எபிசோடுகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னைக்கு கிளம்புகின்றனர். அப்போது பாக்கியலட்சுமி குடும்பத்தை பார்க்கின்றனர்.
Mahindra &Mahindra நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் பல சிக்கல் இருக்கிறது. கோபி மனம் மாறி தொழில் தொடங்கலாம் என சொல்ல ஆனால் தன் மீது வந்த பழியால் பாக்கியா தொழிலில் முன்னேற்றம் இல்லை. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் வந்து பாக்கியாவிற்கு உதவி செய்வது போல மெகா சங்கமத்தில் காட்டப்படும். இதுவரை இது மூன்றாவது மெகா சங்கமம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த இரண்டு சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் டாப் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.