தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று தற்போது அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விடுமுறை நீட்டிப்பு:
தமிழகத்தில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடப்பு ஆண்டு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. இதனை 15ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்தியாவில் 75 ரூபாய் நாணயம் அறிமுகம் – ஒன்றிய அரசு வெளியீடு!
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இட்டின் முடிவில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 7ம் தேதி அன்று பள்ளிகளை திறக்கப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.