இந்தியாவில் 75 ரூபாய் நாணயம் அறிமுகம் – ஒன்றிய அரசு வெளியீடு!
இந்தியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு ரூபாய் 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
75 ரூபாய் நாணயம்:
இந்தியாவில் கடந்த 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நாடாளுமன்ற கட்டடம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பின்னர், கடந்த 1927 ஆம் ஆண்டில் 6 ஏக்கர் பரப்பளவிலான இந்த நாடாளுமன்ற கட்டடம் சட்டமன்ற கூட்டு அமர்வின் போது குறிப்பிட்ட சிலர் மட்டுமே அமரக்கூடியதாக இருந்தது. இதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அன்று புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கிட்டத்தட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் 1200 கோடி செலவில் 18 ஏக்கர் அளவுக்கு 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி!
இந்நிலையில், வரும் மே 28ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருக்கிறது. மேலும், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு ரூபாய் 75 நாணயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்றத்தின் கட்டணம், நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.