மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இந்த மாத இறுதிக்குள் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போது வரைக்கும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் பாஜக அரசு மத்திய அரசு மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வெளியிட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு ஜாக்பாட் அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு இன்னும் சில நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இன்னும் இரண்டு மாதங்களில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய பாஜக அரசு வரும் மே 31ஆம் தேதிக்குள் இதற்கான அறிவிப்பை வெளியிடும் எனவும் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.