தமிழகத்தில் ஓட்டுனர்களுக்கு மானியம்.. பெண்களுக்கான புதிய திட்டம்.. அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் கார், ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களை பெண்கள் இயக்கி வருகின்றனர். இது போன்ற, பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தீவிரமாய் பரவும் எலிக்காய்ச்சல்.. பொதுமக்களே உஷார்!!
அதன்படி, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் கிட்டத்தட்ட 1000 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு அடுத்த வாரம் வெளியிட உள்ளது. கடந்த ஆண்டு 500 பெண்களுக்கு ரூபாய். 1 லட்சம் மானியம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


























