
12 வகுப்பு உயிரியல் தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் கவனத்திற்கு.. இந்த கேள்விகளை மறக்காம படிச்ச 60% மேல் மதிப்பெண் வாங்கலாம் ..
பொதுவாக தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் SSLC மற்றும் HSC தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குநரகம் (DGE TN) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் உயிரியல் பாடத்தில் எந்தெந்த பாடப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இப்பதிவில் காண்போம்.
அதாவது, ” நீட் தேர்வு போன்ற எல்லாவற்றிற்கும் உயிரியல் மதிப்பெண்களே கட் ஆப் மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் உயிரியல் பாடப்புத்தகத்தில் முதல் மூன்று பாடங்கள் மற்றும் கடைசி மூன்று பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த ஆறு பாடங்களை படித்தால் போதும் 60% மேல் மதிப்பெண்கள் பெற முடியும். மேலும், பொது தேர்வுகளில் அதிகப்படியான ஐந்து மதிப்பெண் கேள்விகள் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று பாடங்களில் இருந்து தான் கேட்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அண்ட செல்லின் அமைப்பு, மகரந்தத்தூள் அமைப்பு மற்றும் சூலகத்தின் அமைப்பு போன்ற கேள்விகளிலிருந்து நிச்சயம் இரண்டு கேள்விகள் இடம் பெறும் என்பதால் இந்த பாடப்பகுதியில் உள்ள வரைபடங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும், உயிரியல் பாடத்தை பொறுத்தவரை Compulsary கேள்விகளில் முழு மதிப்பெண் பெற்றுவிட்டால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. இறுதியாக வரைபடகேள்விகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் வரைபடம் வரைவதற்கு இரண்டு மதிப்பெண் மற்றும் அதனை விரிவாக எழுதுவதற்கு மூன்று மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்பதால் மாணவர்கள் 5 மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்” .























