
நாள் முழுவதும் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்து தண்டனை – பள்ளி நிர்வாகத்தின் இரக்கமற்ற செயல்… வைரலாகும் செய்தி!
இந்தியாவில் கல்வி, மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் முழக்கமிட்டு வரும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் பள்ளி கட்டணத்தை செலுத்த தவறிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கட்டணம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்கும் நோக்கில் ஆங்காங்கே அரசு பள்ளி கூடங்களை அமைத்துள்ளது. இருந்தாலும் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிலையங்களையே நாடி செல்கின்றனர். இந்த தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவது தற்போது வரை எழுந்து வரும் முக்கிய புகார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அரசு தனியார் பள்ளிகளுக்கென்று வகுப்பு வாரியாக கட்டண முறையை நிர்ணயித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை மீறியும் சில பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து பல காரணங்களை கூறி கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளியில் கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி சுமார் 12 மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம் தண்டித்துள்ளது. தற்போது அம்மாநில மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வரும் வேளையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெயிலில் நிற்க வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை கொடுத்துள்ளது.
இனி தமிழிலேயே டாக்டருக்கு படிக்கலாம்!.. அரசின் சூப்பர் நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
தற்போது பள்ளி நிர்வாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கதறி அழுகின்றனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்