இனி தமிழிலேயே டாக்டருக்கு படிக்கலாம்!.. அரசின் சூப்பர் நடவடிக்கை!
நாடு முழுவதும் சமீப நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தங்களது தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடுகளை நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி அரசும் இது போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசின் அறிவிப்பு:
கல்வியை மாணவர்கள் தங்களது தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாராம்சத்தையும் புரிந்து, சிந்திக்க முடியும் என்று அறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இது முழுக்க ஏற்றுக் கொள்ள கூடிய கருத்தாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களின் கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கு தாய்மொழி வழி கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அரசு நாட்டிலேயே முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் படிக்க விரும்புபவர்கள் ஹிந்தியிலும் படிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா? மாணவர்களுக்கு ஜாலி தான் .. வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அவர்கள், மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில், புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ்வழியில் மருத்துவ படிப்பை கற்பிக்க இருப்பதாகவும், இதற்காக மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்படுவதாகவும், விரைவில் இந்த ஏற்பாடுகள் முடிந்து இவை செயல்படுத்தப்படும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்