தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நிரந்தர பணி நீக்கம் – கடும் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நிரந்தர பணி நீக்கம் - கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நிரந்தர பணி நீக்கம் - கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் நிரந்தர பணி நீக்கம் – கடும் எச்சரிக்கை!!

அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் ஊழியர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம்:

தமிழகத்தில் மதுக்கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 100மதுபான கடைகளை நவீனமயமாக்குவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் 500மதுபான கடைகளை மூடப்பட்டதன் விளைவாக பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை சரிக்கட்டும் விதத்தில் தமிழகத்தில் மதுபானங்களின் விலை ரூ.10முதல் ரூ.50 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் உத்தரவு!

இது போல ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மட்டும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தவில்லை. அரசு ஏகப்பட்ட எச்சரிக்கை விடுத்தும் ஊழியர்கள் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் குறைந்தது ரூ.10 அதிகமாக விற்பனை செய்கின்றனர். இது போல, ஊழியர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது போல, இரண்டாவது முறையும் ஊழியர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஊழியர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!