தமிழகத்தில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆவின் பணியாளர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி, சமன் செய்து வழங்க பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி சமன் செய்து வழங்க பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிவிப்பில், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமும், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த ஒன்றியங்களில் சேலம், திருச்சி, மதுரை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மற்ற 21 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரே அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு 38 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி வழங்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்நிலையில் ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே சீரான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் 1,761 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த அறிவிப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 3,18,60,948 கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.