தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கு பணியாளர், பல்நோக்கு பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 31.10.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
பணியின் பெயர் வழக்கு பணியாளர், பல்நோக்கு பணியாளர்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு சமூக நல அலுவலக காலிப்பணியிடங்கள்:

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • வழக்கு பணியாளர் – 02 பணியிடங்கள்
  • பல்நோக்கு பணியாளர் – 01 பணியிடம்
வழக்கு பணியாளர் / பல்நோக்கு பணியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • வழக்கு பணியாளர் – சமூகப்பணி பாடப்பிரிவில் Graduate Degree + 1 ஆண்டு அனுபவம்
  • பல்நோக்கு பணியாளர் – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வழக்கு பணியாளர் / பல்நோக்கு பணியாளர் வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

வழக்கு பணியாளர் / பல்நோக்கு பணியாளர் ஊதியம்:
  • வழக்கு பணியாளர் பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • பல்நோக்கு பணியாளர் பணிக்கு ரூ.6,400/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

NTPC நிறுவனத்தில் Associate வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

சமூக நல அலுவலக தேர்வு முறை:

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நல அலுவலக விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலக முகவரிக்கு 31.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form Link
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!