கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் – முதல் பரிசு ரூ. 10,000.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள்:
தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து 6 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போட்டியானது ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10,000 2 -ம் பரிசாக ரூபாய் 7,000 3ம் பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்