ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு – பீதியில் பொதுமக்கள்! எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்து வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மக்களை ஒரு வழி ஆக்கி இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதனால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
மிகப்பெரிய வெற்றியை எட்டிய மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் திட்டம்’ – அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு இலேசான பாதிப்புகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டில் இருந்தே பணிகளை கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவதாகவும், மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download