வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம் பிரசித்தி பெற்றது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப். 8ம் தேதி மாதாவின் நாள் என்பதால் அன்று திருவிழா நடைபெறும். இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க உள்ளது. அந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. பொதுமக்களுக்கு இலவசமா?? அமைச்சர் உதயநிதி தகவல்!!
அதாவது வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 7.10 மணிக்கும், மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கும் (12.30 AM) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.



























