சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. பொதுமக்களுக்கு இலவசமா?? அமைச்சர் உதயநிதி தகவல்!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் 3 ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், கடந்த ஆண்டு சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக போட்டி நடைபெறவில்லை. இந்த நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! “இனி OVER TIMING கவலை இல்லை”..!!! அரசு உத்தரவு..!!
அதில் சென்னையில் வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் .1 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. அதை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் சனிக்கிழமை காலை நடைபெறும் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்றார். மேலும் போட்டிகள் இரவு 10.30 மணி வரை நடைபெறும், போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.


























