தமிழகத்தில் நாளை (அக்.15) சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (அக்டோபர் 15) தமிழகத்தில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சுங்க வரியை ரத்து செய்தது அரசு..!! ” வாகன ஓட்டிகளுக்கு அடித்த லக்”…!!
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்திய அவர், எந்த கிராமத்தில் காய்ச்சல் என்றாலும் உடனே அங்கு முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். சளி, சேற்றுப்புண் போன்ற மழைக்கால உபாதைகளுக்கு இம்முகாமில் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























