விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!!
அரசு விடுமுறை நாளான இன்று (செப்டம்பர் 17) தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது மாணவர்களை சாதாரண உடைகளில் வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த வகுப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இனி அரசு விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.


























