மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயில் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!
கொரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் – கோவை இடையிலான பயணிகள் ரயில் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் ரயில் ரத்து:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை இந்தியா அடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – கொரோனா 2ம் அலை எதிரொலி!!
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும், இரவு ஊரடங்கு, வாரஇறுதி நாள் ஊரடங்குடன், மே 6ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரையிலும் மட்டுமே கடைகள் திறக்கவும், பேருந்துகளில் 50% பயணிகள் வரை மட்டுமே பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களும் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இயங்கி வந்த 74 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதே போல் கொரோனா முதல் அலை ஊரடங்கிற்கு பின்னர் மார்ச் மாதம் முதல் இயங்கி வந்த மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்