நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் – NPCI அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமுள்ள இந்த பேரிடர் காலத்தில் 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
UPI பரிவர்த்தனைகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. அதன் மொத்த தொகை எண்ணிக்கை 4,93,663 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த மார்ச் மாத கணக்கின் படி இதில் 1.4 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்லைன் UPI பரிவர்த்தனைகளில் போன்பே (Phonepe) முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் 1.18 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. அதன் மொத்த தொகை 2,34,203 கோடி ருபாய் ஆகும்.
இந்தியாவில் முழு ஊரடங்கு தவிர்க்க முடியாதது – பிரதமர் மோடிக்கு கடிதம்!!
அதற்கு அடுத்த இடத்தில் கூகுள் பே (1,90,106 கோடி), Paytm (41,468 கோடி), ஆக்ஸிஸ் பேங்க் அப்ளிகேஷன் (747 கோடி), அமேசான் பே (4,272 கோடி), எஸ் பேங்க் அப்ளிகேஷன் (5120 கோடி), BHIM அப்ளிகேஷன்கள் (6886 கோடி) ஆகிய இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்