இந்தியாவில் முழு ஊரடங்கு தவிர்க்க முடியாதது – பிரதமர் மோடிக்கு கடிதம்!!
இந்தியாவில் கொரோனா இராண்டாம் அலை பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராகுல் காந்தி கடிதம் :
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நோயாளிகள் அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். போதிய மருந்துகள் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதிதாக நாடு முழுவதும் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கொரோனா சூழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் கொரோனா தடுப்பூசி செயல்படுத்தும் திட்டத்திலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. அரசின் திறனற்ற நிர்வாகத்தால், இந்தியா தற்போது இக்கட்டான நிலைமையை சந்தித்து வருகிறது. இது தொடக்கம் தான் என்று பயப்படுகிறேன். மேலும் மக்கள் மருந்துகளுக்காக வீதியில் அலைவது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் – ஐநா எச்சரிக்கை!!
இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஊரடங்கும் தவிர்க்க முடியாதது, தான் மக்களின் உயிர் காக்க ஊரடங்கு அவசியமே என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்