இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – கொரோனா 2ம் அலை எதிரொலி!!
தற்போது மாலத்தீவு அரசு இரவு நேர ஊரடங்கை இன்று முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அங்கு கொரோனா நோய் பரவல் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த கொரோனா என்ற நோய் பரவலின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாலத்தீவுகளில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் அந்த அரசு இரவு நேர ஊரடங்கினை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் அங்கு 300 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இந்த வாரம் 700 ஆக அதிகரித்ததால் அரசு இந்த முடிவினை ஏற்றுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மாலத்தீவுகளின் தலைநகர் மலேவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த வாரம் ரமலான் பண்டிகையை மக்கள் கூட்ட நெரிசலாக கொண்டாடியதால் ஏற்பட்டுள்ளதாக மாலத்தீவுகள் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – முதல்வர் அறிவிப்பு!!
இந்த இரவு நேர ஊரடங்கின் போது சுற்றலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்