தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பணிகள் – பயனர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?

0
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பணிகள் - பயனர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பணிகள் - பயனர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பணிகள் – பயனர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?

மத்திய அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் தமிழகத்தில் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்த கூடுதல் விவரங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் மின் மீட்டர்கள்:

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் முடிந்து முதற்கட்டமாக சென்னை டி.நகரில் மட்டும் 1.09 லட்சம் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதால், மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் போன்ற பணிகளுக்கு அலைய வேண்டிய தேவையில்லை. இது போன்ற பல்வேறு நன்மைகளும் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கியும், குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.10,790 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரிக்கான ஊக்கத்தொகை பெற இன்றே கடைசி நாள் – சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!

மேலும், இந்த திட்டம் முழுவதுமாக சர்வர் மூலமாக செயல்படுவதால், ஊழியர்கள் வீட்டிற்கு வராமலேயே மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யவும், அந்த தொகையை பயனர்களுக்கு sms மூலமாக தெரியப்படுத்தவும், அவ்வாறு கட்டணம் செலுத்தாத நிலையில், மின் பயன்பாட்டை நிறுத்தவும் முடிவும். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் பயன்பாட்டு தளங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நடக்க இருக்கிறது. இதற்காக பயனர்கள் கூடுதலாக எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!