தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு – தலைமையாசிரியரின் அசத்தல் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு பரிசை அறிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகவும் குறைந்த விலையில் இருந்தது. அதன் பிறகு அரசின் முயற்சிகளால் மாணவர் சேர்க்கை சதவீதம் படிப்படியாக உயர்ந்தது. பலரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர்.
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் பணிகள் – பயனர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?
இதனையடுத்து கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது 2023 – 2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் நன்னிலம் அருகே உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் இந்திரா அவர்கள் வரவுள்ள கல்வியாண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் பள்ளியில் சேரும் மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download