தமிழகத்தில் 11% டாஸ்மாக் கடைகள் மூடல் – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் இயங்கி வரும் மொத்த டாஸ்மாக் கடைகளில் 11% கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் சுமார் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் சுமார் 11 சதவிகித டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் 500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு – தலைமையாசிரியரின் அசத்தல் அறிவிப்பு!
மேலும் ஏற்கனவே 96 கடைகள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் கிட்டத்தட்ட 600 கடைகள் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக டாஸ்மாக் கடை பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என அறிவித்த அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும், டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு 840 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download