சிம் கார்டு வாங்க இனி இது கட்டாயம் – மத்திய அரசின் புதிய உத்தரவு.. ஜன.01 முதல் அமல்!
இந்தியாவில் புதிய சிம் கார்டு வாங்குவதற்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இதனை மீறினால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறை:
இந்தியாவில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அந்த எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. போலி சிம் கார்டு பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இனி ஒரு பயனர் சிம் கார்டு பெற கட்டாயம் பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும்.
அத்துடன், சிம் கார்டு பரிவர்த்தனைகளின் அபாயத்தை குறைக்க KYC விவரங்களையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இத்தகைய, விதிகளை மீறி சிம் கார்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.