ஜன.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!! 

0
ஜன.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!! 
ஜன.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!! 
 இந்தியாவில் கூடுதலாக பனி பொழிந்து வருவதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 விடுமுறை:

இந்தியாவில் குளிக்காலம் துவங்கியுள்ள நிலையில் டெல்லி, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் வழக்கத்திற்கும் மாறாக பனி பொழிந்து வருகிறது. அதாவது, அதிகபட்ச வெப்பநிலையாகவே 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். இதனால், பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலத்தில் டிச.31 முதல் ஜன.14 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே போல, டெல்லியில் ஜன.1 முதல் ஜன.6 வரையிலும், பஞ்சாப் மாநிலத்தில் டிச.24 முதல் டிச.31 வரையிலும், ஹரியானா மாநிலத்தில் ஜன.1 முதல் ஜன.15 வரையிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் டிச.25 முதல் ஜன.5 வரையிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் டிச.26 முதல் 31 வரையிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!