ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியீடு!

0
ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு - விடுமுறை குறித்த
ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்  கடை:

தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இடைவிடாத தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மக்கள் நீருக்குள் ததத்தளிக்கும் நிலை உருவானது. உடனடியாக அரசு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியுடன் பொது மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தற்போது தான் நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் முக. ஸ்டாலின் ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இப்பணிகள் காரணமாக மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையம் செயல்படும் எனவும் அதற்கு பதிலாக 2024 ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் எனவும் உணவு வழங்கல் துறை அறிவிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!