ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு கடும் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!
வங்கிகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரூபாய் 2000 நோட்டுகளை மாற்ற சென்றுள்ள நிலையில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
ரூ.2000 நோட்டு:
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் ரூ.500, 1000 நோட்டுக்கு பதிலாக ரூபாய் 2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவில் 2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்ததன் காரணத்தினால் மீண்டும் ரிசர்வ் வங்கி 2000 நோட்டுகளை பெற இருப்பதாக அறிவித்திருந்தது.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது!
மேலும், அக்டோபர் 30ம் தேதிக்குள் 2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வங்கிகளில் 2000 நோட்டுகளை மாற்றி வருவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், வங்கிகளில் ஒரே நேரத்தில் அதிகளவிலான பொதுமக்கள் 2000 நோட்டுகளை மாற்ற வருவதன் காரணத்தினால் 2000 நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்கு சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ரூபாய் 500 நோட்டுகள் வங்கிகளில் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், பல வங்கிகளில் 2000 நோட்டுகளை மாற்றுவது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அக்டோபர் 30ம் தேதி வரைக்கும் 2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் இருப்பதன் காரணத்தினால் பொதுமக்கள் பொறுமையாக வங்கிகளில் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download