“அதானியை முதல்வர் சந்திக்கவில்லை” அவ்வாறு கூறுவோர் மீது வழக்கு..!! அமைச்சர் பேச்சால் பரபரப்பு…
கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்ச முறைகேடு வழக்கில் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது, பெரும் சர்ச்சையாக மாறி பங்குசந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன் பின் அவ்வழக்கில் இருந்து அதானி விடுவிக்கப்பட்டாலும் அச்சர்ச்சையானது இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதானி குழும தலைவர் கெளதம் அதானியை நேரில் சந்தித்ததாக சமூகவலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவியது. இது குறித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “அதானியை முதல்வர் சந்திக்கவில்லை” எனவும், “அதானி நிறுவனத்துடன் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை” எனவும், “அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
























