‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா திருமணத்திற்கு பிறகு ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
தற்போது பிரபலங்களை மக்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக பின்தொடர்ந்து அவர்களை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது செம்பருத்தி ஷபானா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் லைக்குகளை அளித்து வருகின்றனர்.
புதுமண ஜோடி:
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களும் தங்களது ரசிகர்களை சென்று எளிதில் சேரும் வகையில் இன்ஸ்டாகிராமில் தங்களின் லேட்டஸ்ட் அப்டேட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பிரபலங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் என்றால் அவர்களின் ஒவ்வொரு பதிவிற்கும் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் பெரிய அளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது கடந்த மாதம் முதல் மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் சின்னத்திரை பிரபலங்கள் ஷபானா மற்றும் ஆர்யன்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இசைவாணி தனது திருமணத்தை மறைத்தது ஏன்? அவரே வெளியிட்ட வீடியோ!
ஜீ தமிழை சேர்ந்த நடிகை ஷபானாவும், விஜய் டிவியை சேர்ந்த ஆர்யனும் எவ்வாறு காதலித்தார்கள். எப்படி அறிமுகம் கிடைத்தது என்று ரசிகர்கள் அவர்களின் காதல் செய்தி வெளிவந்த உடனேயே கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள். திடீரென்று எதிர்பாராத விதமாக இவர்களின் திருமண செய்தி வெளிவந்தது. தொடர்ந்து திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், இவர்களின் சக நடிகர்கள் மற்றும் நண்பர்களுடன் எடுத்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வரை இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
‘ராஜா ராணி’ ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ துர்கா – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் ஷபானா சமீபத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார் என்பதை அவர் செம்பருத்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் அறிந்து கொண்டனர். தற்போது ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் தங்களின் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த செந்தில் என்பவருடன் சேர்ந்து திருமணத்திற்கு பிறகு எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ளார் ஷபானா. அதில் தங்களின் முக்கிய நாளன்று இவ்வளவு சிறப்பாக புகைப்படம் எடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.