செப். 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், சுற்றுலாத் தலங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேகாலயா மாநிலத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பின் நேர்மறை விகிதம் குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் பெருகி வந்த சூழலில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளித்து மேகாலயா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை ஆய்வு செய்த அரசு, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளை மீண்டும் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழும் ஷில்லாங் பகுதிக்கு ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு உருவான கொரோனா நோய் தொற்றின் போது இந்த சுற்றுலாத் துறை மூடப்பட்டது. இதற்கிடையில் கொரோனா 2 ஆம் அலை பரவலும் குறைந்துள்ளதை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுற்றுலாத் துறைகளை மீண்டும் செயல்படுத்துவதாக முதல்வர் கான்ராட் கே சங்மா அறிவித்துள்ளார்.
6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
அதே நேரத்தில் அம்மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனவும், நகர்ப்புறங்களில் மட்டும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம்!
சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை, முழு தடுப்பூசி போட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் மட்டும் செப்டம்பர் 1 முதல் மேகாலயாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் தடுப்பூசி போடாத அல்லது ஒரு டோஸ் மட்டும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள், மேகாலயா வரும் 72 மணி நேரத்திற்குள் பெற்ற கொரோனா தொடர்பான RT-PCR பரிசோதனை சான்றிதழை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மேகாலயா மாநில சுற்றுலாத் துறையின் செயலி மூலம் மேகாலயாவிற்கு நுழைவதற்கான மின்னஞ்சல் அழைப்பை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு WhatsApp அசைன்மென்ட் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
மேலும் ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேக்கள் அல்லது விருந்தினர் மாளிகைகளில் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் ஒரு இரவு தங்குவதற்கும் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். அவர்கள் தங்கள் முழுமையான பயணத்திட்டத்தையும் அறிவிக்க வேண்டும் எனவும், மேகாலயாவில் உள்ள எந்தவொரு குடும்பத்தினரின் அல்லது நண்பரின் விருந்தினர்களாக தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவர்கள் தங்கியிருக்கும் குடும்பம் அல்லது நண்பரின் முழு முகவரி மற்றும் தொடர்பு முகவரி குறித்த விவரங்களை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.