தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு WhatsApp அசைன்மென்ட் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு WhatsApp மூலம் அசைன்மென்ட் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அசைன்மென்ட்:
கொரோனா பெருந்தொற்று தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூட தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளில் புத்தகங்கள் வழக்கங்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
L&T நிறுவனத்தில் 1,800க்கும் மேற்பட்டோருக்கு வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!
மேலும் ஆன்லைன் வகுப்புகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு யூனிட் வாரியாக அசைன்மென்ட் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கொண்ட WhatsApp குழுவை உருவாக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு யூனிட் வாரியாக அசைன்மென்ட் கேள்விகளை அனுப்பி வைப்பார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து மாணவர்கள் அதற்கான விடை எழுதி அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு எந்த பகுதியில் கவனம் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் அது குறித்த விளக்கங்களை WhatsApp மூலம் மாணவர்களுக்கு அனுப்பலாம். இதில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது தலைமை ஆசிரியரின் பணியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.