L&T நிறுவனத்தில் 1,800க்கும் மேற்பட்டோருக்கு வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!
இந்தியாவை சேர்ந்த பிரபல பொறியியல் நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ (L&T), வளாக ஆட்சேர்ப்பு மூலம் சுமார் 1,800 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தி இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
L&T என்று அழைக்கப்படும் லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனம், ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த இந்த நிறுவனம் தற்போது புதிய பணியமர்தலின் மூலம் சுமார் 1,800க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
அற்புதம்மாள் கோரிக்கை ஏற்பு – பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
இந்த புதிய பணியமர்த்தலில் பட்டதாரி பொறியாளர்கள், முதுகலை பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள், டிப்ளமோ படித்தவர்கள், மேலாண்மை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளும் அடங்குவர். அதன் கீழ் லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் (L&T), எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், மைண்ட் ட்ரீ மற்றும் எல் அண்ட் டி ஃபைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட அதன் குழு நிறுவனங்களும் தனித்தனியாக ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த புதிய பணிக்காக, L&T நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு குழு, IIT மற்றும் NIT உள்ளிட்ட அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறந்த தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை பார்வையிட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரிகளை அணுகிய நிறுவனம் 36,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் இந்த நிறுவனம் 8,000 க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல்களை நடத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் MD மற்றும் CEO S N சுப்ரமணியன் கூறுகையில், ‘இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தகுதி அடிப்படையிலான பணியமர்த்தல் பற்றிய எங்கள் தத்துவம், பயிற்சியாளர்களை எதிர்காலத் தலைவர்களாக மாற்றுவதில் உதவி புரிந்து வருகிறது’ என கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை, விண்ணப்பங்கள் அழைப்பு, மதிப்பீடுகள், நேர்காணல்கள், ஆவணங்களைச் சரிபார்ப்பது உள்ளிட்ட முறைகள் அனைத்தும் L&T நிறுவனத்தின் உள் தளத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 1,800 புதிய பணியிடங்களில் சுமார் 1,100 பட்டதாரி மற்றும் முதுகலை பொறியாளர்கள் ஒரே நாளில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.