பிப்.15 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாய் நாகலாந்து மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் பிப்ரவரி 15 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
நாடு முழுவதும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3ம் அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச தீவிர தன்மையுடன் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். ஆனால் இம்முறை மருத்துவமனை சேர்ப்பு, உயிரிழப்புகள் போன்றவை அதிகபட்சமாக ஏற்படாதது மட்டும் தான் சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது.
Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு – பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!
இதனை தொடர்ந்து நாகலாந்து மாநிலத்தில் நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த டிசம்பரில் நாகாலாந்தில் பள்ளிகளில் 1-8 வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது . தற்போது மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதலுக்கு உட்பட்டு 2022 பிப்ரவரி 15 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்க நாகலாந்து அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உடற்பயிற்சி வகுப்புகளை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI அறிவிப்பு!
அதனை தொடர்ந்து நாகாலாந்தில் நேற்று ஜனவரி 31 ஆம் தேதி SOP சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில், மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம், நாகாலாந்து பள்ளிக் கல்வி வாரியத்தால் (என்பிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் ஆப்லைனில் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.